கொடைக்கானல்: கொடைக்கானலில் புதன்கிழமை அதிகாலை முதல் விடிய விடிய பலத்த காற்று வீசிவருவதால் பல இடங்களில் மரங்கள் விழுந்து வருகின்றன. இதனால் மின் தடை ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பரவலாக பலத்த மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் ஏரிச்சாலை,அப்சர்வேட்டரி,அடுக்கம்,பாலமலை,அட்டக்கடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகளும்,மரங்களும் விழுந்துள்ளது.
தைக்கால்,பெரியகுளம் செல்லும் வனச் சாலைப் பகுதிகளில் அமைந்துள்ள மின் கம்பங்களில் சிறு,சிறு மரக் கிளைகள் விழுந்துள்ளதால் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைப் பகுதி முழுவதுமே பலத்த காற்றுடன் தொடர்ந்து சாரல் மழை நிலவி வருவதால் மின்விநியோகம் தடைபட்டுள்ளது இதனால் பொது மக்கள் சிரமமடைந்துள்ளனர்.
எந்த பணிகளுக்கும் செல்ல முடியாத நிலை இருப்பதால் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக அரசின் திட்டங்களால் அதிகளவில் பயனடைபவா்கள் ஹிந்துக்களே: கனிமொழி எம்.பி.

மேன்சன் குத்து பாடல்!

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

இந்திரா பாடல் வெளியீடு!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


