இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மத்திய ஜப்பானில் அதிகரிக்கும் கரோனா : அவசர நிலை அறிவிப்பு

மத்திய ஜப்பானில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அவசர நிலையை அறிவித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News image
மத்திய ஜப்பானில் அதிகரிக்கும் கரோனா : அவசர நிலை அறிவிப்பு
Updated On :6 ஆகஸ்ட் 2020, 11:27 am

PTI

டோக்கியோ, ஆகஸ்ட் 6: மத்திய ஜப்பானில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அவசர நிலையை அறிவித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்திய ஜப்பான் மாகாணத்தில் ஜூலை 15 முதல் நாள்தோறும் 100 க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது.

மத்திய ஜப்பான் ஆளுநர் ஹிடாகி ஓமுரா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த அவசரகால நிலையில் வணிக வளாகங்கள் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.

மக்கள் கூட்டமாக பொது இடங்களில் கூட வேண்டாம். இந்த தொற்றால் பாதிக்கப்படும் 70 சதவீத மக்கள் 30 வயதுடையோர். பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு தொற்றின் அறிகுறி இல்லை. 

நோய்த் தொற்று பரவாமல் தடுக்க இரவு நேரங்களில் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.