/

ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பதவியேற்பு

ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜம்மு-காஷ்மீர் தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

News image
ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பதவியேற்பு
Updated On :27 ஜனவரி 2024, 5:05 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜம்மு-காஷ்மீர் தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

இதனால் ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக அக்டோபர் 31-ஆம் தேதி குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிரிஸ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டார். இதனால்  ஜம்மு-காஷ்மீரின் முதல் துணை நிலை ஆளுநர் என்ற சிறப்பை அவர் பெற்றார். எனினும் 9 மாதங்களுக்கு பின்னர் நேற்று முன் தினம் (புதன் கிழமை) அவர் தமது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை அடுத்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா ஜம்மு-காஷ்மீரின் புதிய துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீரின் முதல் துணை நிலை ஆளுநராக பதவியேற்ற முதல் அரசியல்வாதி என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் காஸிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.