/

முலாயம் சிங் உடல்நிலை சீராக உள்ளது -மருத்துவமனை

லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்  முலாயம் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :8 ஆகஸ்ட் 2020, 7:44 am

PTI

லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்  முலாயம் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் முலாயம் சிங் யாதவ் (வயது 80). இவர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சிறுநீர் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மேதாந்தா மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் கபூர் கூறுகையில், 

முலாயமின் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என தெரியவந்தது. மற்ற பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் சீராக உள்ளது. 

மேலும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.