லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உள்நாட்டு உற்பத்தியால் செலவினம் குறையும்: அமைச்சர் ராஜ்நாத் சிங்

உள்நாட்டிலேயே ராணுவ தளவாட உற்பத்தியை துவங்கினால் நாட்டின் பெரும்பகுதி செலவினத்தை சேமிக்க முடியும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 1:16 pm

DIN

உள்நாட்டிலேயே ராணுவ தளவாட உற்பத்தியை துவங்கினால் நாட்டின் பெரும்பகுதி செலவினத்தை சேமிக்க முடியும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்திருந்தார்.

சுயசார்பு திட்டத்தின் கீழ் பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், 2020-2024-ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இன்று (திங்கட் கிழமை) பாதுகாப்புத்துறை சார்ந்து தன்னம்பிக்கை இந்தியா வாரம் என்ற திட்டத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது, உள்நாட்டு உற்பத்தியை துவங்குவதன் மூலம் நாட்டின் பெரும்பகுதி செலவினத்தை குறைக்க இயலும். இறக்குமதி செலவை குறைப்பதன் மூலம் நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை வளர்க்க இயலும் என்று தெரிவித்தார்.

முப்படைகளுக்கும் ரூ.4 லட்சம் கோடி அளவிலான தளவாடங்கள் அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளுக்குள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும். துப்பாக்கிகள், சரக்கு போக்குவரத்துக்கான விமானங்கள், ரேடார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.