மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் பதவி விலகினர்

மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்பித்தனர்.

News image

காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் பதவி விலகினர்

Updated On :11 ஆகஸ்ட் 2020, 5:58 am

இம்பால், ஆகஸ்ட் 11: மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்பித்தனர்.

இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஹென்ரி சிங் செவ்வாய்க்கிழமை கூறுகையில்,

மணிப்பூரில் திங்கள் கிழமை நடைபெற்ற சட்டசபையின் ஒரு நாள் கூட்டத்தை கங்கிரஸ் கட்சியின் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். அவர்களில் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

நேற்றைய கூட்டம் முடிந்தவுடன் சபாநாயகரிடம் அவர்கள் ராஜினாமா கடிதத்தை சமர்பித்தனர். இன்னும் சபாநாயகர் கடிதத்தை ஏற்கவில்லை என கூறினார்.

மணிப்பூரில் 60 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சட்டமன்றத்தில் சபாநாயகர் உட்பட 53 பேர் தற்போது உறுப்பினர்களாக உள்ளனர்.

முன்னதாக நான்கு உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர், மேலும் பாஜகவில் மூன்று பேர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆளும் பாஜக கூட்டணியில் சபாநாயகர் உள்பட 29 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். காங்கிரசில் 24 பேர் இருந்தனர், அவர்களில் எட்டு பேர் பங்கேற்கவில்லை.

அதனால் பாஜக தலைமையிலான பிரேன் சிங் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.