ஹரியாணா சிறப்பு காவல் படை நடத்திய சோதனையில் 331 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு டிரேக்டரில் கஞ்சா கடத்தப்பட்டது. இந்த டிரேக்டர் ஹரியாணாவின் பல்வால் மாவட்டத்தை கடக்கும் போது ஹரியாணா சிறப்பு காவல் படை சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் 62 பொட்டலங்களில் அடைக்கப்பட்ட 331 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் டிரேக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா கடத்திய 3 பேரை கைது செய்துள்ளனர்.