காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

லண்டனில் இருந்து 240 பயணிகள் நாடு திரும்பினர்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இயக்கிய முதல் சிறப்பு விமானம் லண்டனில் இருந்து 240 இந்தியர்களை அழைத்துக் கொண்டு இன்று இரவு கோவா விமான நிலையம் வருகின்றது.

லண்டனில் இருந்து 240 பயணிகள் நாடு திரும்பினர் (கோப்புப்படம்)

Published On :27 ஜனவரி 2024, 10:39 pm IST

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இயக்கிய முதல் சிறப்பு விமானம் லண்டனில் இருந்து 240 இந்தியர்களை அழைத்துக் கொண்டு இன்று இரவு கோவா விமான நிலையம் வருகின்றது.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெடின் சிறப்பு விமானத்தில் 240 பயணிகள் இந்தியாவிற்கு வருகின்றனர். இந்த விமானம் இந்தியாவில் உள்ள கோவா விமான நிலையத்திற்கு இன்று இரவு 11.50 மணியளவில் தரையிறங்க உள்ளது.

கோவாவில் இருந்து இந்த சிறப்பு விமானம் 89 பயணிகளுடன் லண்டனுக்கு ஆகஸ்ட் 21 மதியம் 2.30 மணியளவில் புறப்படுகிறது.

மேலும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி கனடாவுக்கு தனது இரண்டாவது நீண்ட தூர சிறப்பு விமானத்தை 357 பயணிகளுடம் தில்லியில் இருந்து கனடாவின் டொராண்டோவுக்கு இயக்குகிறது.

இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் கூறுகையில், ‘ஆம்ஸ்டர்டாம், டொராண்டோ மற்றும் ரோம் ஆகிய நாடுகளுக்குப் பிறகு நான்காவது நீண்ட தூர விமான பயணமாக லண்டனில் இருந்து இயக்குகிறோம்.

எங்களது விமானங்கள் பல மாதங்களாக வெளியூர்களில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர்களை வீடு திரும்ப உதவியாக இருக்கும்’ என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.