ஆற்றில் வாகனம் கவிழ்ந்ததில் 2 வீரர்கள் காணவில்லை
ஹிமாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை வாகனம் கவிழ்ந்ததில் இந்திய-திபத் எல்லைப் பாதுகாப்பு காவலர்கள் காணவில்லை என காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.ராணா தெரிவித்தார்.


ஹிமாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை வாகனம் கவிழ்ந்ததில் இந்திய-திபத் எல்லைப் பாதுகாப்பு காவலர்கள் காணவில்லை என காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.ராணா தெரிவித்தார்.
இதுகுறித்து கின்னயூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.ராணா கூறுகையில்,
அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த வீரர் நீமா தோண்டுப் மற்றும் ஓட்டுநர் பிரதீப் குமார்வின் ஆகிய இருவரும் இன்று காலை 10:30 மணியளவில் வாகனத்தில் ரெக்காங் பியோவுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் ஸ்பைலோ கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 5 அருகே சென்ற போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்தது. இதில், காவலர்கள் இருவரும் காணவில்லை. அவர்களைத் தேடும் பணிகள் நடந்து வருகின்றது என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...