மங்களூரு மாநகராட்சியின் புதிய ஆணையராக அஷ்கி ஸ்ரீதரை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 20 நாள்களுக்கு முன்பு, முன்னாள் ஆணையர் அஜித்குமார் ஹெக்டே இடமாற்றம் செய்யப்பட்டதால் ஆணையர் பதவி காலியாக இருந்தது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீதர், பிதர் பகுதியில் துணை ஆணையராக பணியாற்றி வந்தவர்.
சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர் ஸ்ரீதர். இதற்கு முன்பு மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தில் உதவி செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.