விருதுகளை திருப்பியளிக்க சென்ற விளையாட்டு வீரர்கள் தடுத்து நிறுத்தம்
வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுகளை திருப்பியளிக்க சென்ற விளையாட்டு வீரர்களை தில்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.


வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுகளை திருப்பியளிக்க சென்ற விளையாட்டு வீரர்களை தில்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.
இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மல்யுத்த வீரர் கர்தார் சிங் உள்பட 30க்கும் மேற்பட்டோர் தங்களின் விருதுகளை குடியரசுத் தலைவரிடம் திருப்பியளிக்க அவரது மாளிகை நோக்கி சென்றனர்.
இதையடுத்து, அவர்களை தில்லி காவல்துறை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து மல்யுத்த வீரர் கர்தார் சிங் கூறியதாவது,
பஞ்சாபிலிருந்து 30 விளையாட்டு வீரர்கள் மற்றும் வேறு மாநில வீரர்கள் சிலர் தங்களது விருதுகளை திருப்பியளிக்க உள்ளோம் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...