அதிர் ரஞ்சன் சௌத்ரி
அதிர் ரஞ்சன் சௌத்ரி

‘விவசாயிகளிடம் நேருக்கு நேர் பேசும் தைரியம் மோடிக்கு இல்லை’: அதீா் ரஞ்சன் சௌத்ரி

விவசாயிகளிடம் நேருக்கு நேர் பேசும் தைரியம் மோடிக்கு இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் அதீா் ரஞ்சன் சௌத்ரி விமர்சித்துள்ளார்.
Published on

விவசாயிகளிடம் நேருக்கு நேர் பேசும் தைரியம் மோடிக்கு இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் அதீா் ரஞ்சன் சௌத்ரி விமர்சித்துள்ளார்.

தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து 30வது நாளாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அதீா் ரஞ்சன் சௌத்ரி பேசுகையில்,

“வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளிடம் நேருக்கு நேர் பேசும் தைரியம் மோடிக்கு இல்லை. ஆனால், விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி நேரடியாக வழங்கப்படும் என மத்திய அரசு கூறுகின்றது.

இந்த முழுத் தொகையும் விவசாயிகளுக்கு போகாது, ஏனெனில் இன்னும் இடைத்தரகர்கள் உள்ளனர்.” என விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com