ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானிகள் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ சீட்டா ரக ஹெலிகாப்டர் ஒன்று திங்கள்கிழமை காலை 11.30 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரேசி பகுதியில் கீழே விழுந்து வெடித்து சிதறியது.
இதில், ஹெலிகாப்டர் விழுந்த கணத்தில் விமானிகள் இருவரும் பாராசூட் உதவியுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.