கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பண்ருட்டியில் காதல் திருமணம் செய்த கணவன் மனைவி தற்கொலை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை புதிய கடலூர் ரோடு எஸ்.கே.வி.நகரில் வசித்து வருபவர் சிவக்குமார் (31) இவர் சிற்ப வேலை செய்து வருகிறார்.

News image
Updated On :5 ஜூலை 2020, 10:33 am

DIN


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை புதிய கடலூர் ரோடு எஸ்.கே.வி.நகரில் வசித்து வருபவர் சிவக்குமார் (31) இவர் சிற்ப வேலை செய்து வருகிறார்.

கரோனா பொது முடக்கத்தால் வேலை கிடைக்காததால் கீரை வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை இவரது மனைவி சரண்யா(24) கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து  வீட்டிற்குள் சென்ற சரண்யா புடவை துணியால் தூக்கு போட்டு கொண்டார். அலறல் சத்தம் கேட்டு ஓடி பார்த்த கணவன் சிவக்குமார் மனைவியை மீட்டு பண்ருட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சரண்யா இறந்த விட்டதாக கூறினர். இதனால் செய்வதறியாது திகைத்த கணவன் சிவக்குமார் பயத்தில் அவரும் சரண்யா தூக்கில் தொங்கிய அதே இடத்தில் பனியன் துணியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி காவல் ஆய்வாளர் அம்பேத்கார், பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர்-மனைவி தற்கொலை குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தற்கொலை செய்து இறந்துபோன சிவக்குமார் - சரண்யா தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.