கரோனா பொதுமுடக்கத்தால் வேலை வாய்ப்பை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 7,500 நிவாரணம் வழங்கவேண்டும், நுண்நிதி நிறுவனங்களில் விவசாயத் தொழிலாளர்கள் பெற்றுள்ளகடன்களை அரசே ஏற்று கடனை தள்ளுபடி செய்யவேண்டும், கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் முலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கவேண்டும், 60 வயது நிறைவடைந்த முதியோர்களுக்கு மாதம் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்கவேண்டும், வீடு, வீடாகச் சென்று கரோனா பரிசோதனை செய்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.