டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கடலூரில் சட்ட நகல் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

கடலூரில் சட்ட நகல் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினரை காவலர்கள் கைது செய்தனர். 

News image
Updated On :10 ஜூன் 2020, 6:07 am

DIN


கடலூரில் சட்ட நகல் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினரை காவலர்கள் கைது செய்தனர். 

விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகல் எதிர்ப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகில் திரண்ட விவசாயிகள் சங்கத்தினர் 4 பேருக்காக துணை கண்காணிப்பாளர் தலைமையில் 3 ஆய்வாளர், 6 உதவி ஆய்வாளர்கள், 10 காவலர்கள் குவிந்தனர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி சட்ட நகலை கிழித்ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.