கடன் பிரச்னை: கூலித்தொழிலாளி குடும்பத்துடன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி

திருச்சியில் கடன் பிரச்னையால் எலி மருந்து பசை சாப்பிட்டு குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடன் பிரச்னை: கூலித்தொழிலாளி குடும்பத்துடன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி

திருச்சி: திருச்சியில் கடன் பிரச்னையால் எலி மருந்து பசை சாப்பிட்டு குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி உறையூர் வாத்துக்காரர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (51). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பத்மா (40). மகள் சுவாதி ( 14), மகன் நவீன்(12). 

இவர்கள் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடன் பிரச்னை இருந்து வந்துள்ளது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தர சனிக்கிழமை இரவு சாப்பிடும் போது எலி மருந்து பசையை உணவில் கலந்து உட்கொண்டுள்ளனர். இதுகுறித்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.  

சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள்  வீட்டில் மயங்கி கிடந்த நால்வரையும் மீட்டு பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உறையூர் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com