கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாகன சோதனையில் சிக்கிய அமமுக பெண் பிரமுகர் கைது: 4 கிலோ கஞ்சா, போலி அடையாள அட்டைகள் பறிமுதல்

கோவையில் காவலர்கள் நடத்திய வாகன சோதனையின் போது காரில் கஞ்சா வைத்திருந்த அமமுக பெண் நிர்வாகியை காவலர்கள் கைது செய்தனர்.

News image
Updated On :18 ஜூன் 2020, 3:04 am

DIN

கோவையில் காவலர்கள் நடத்திய வாகன சோதனையின் போது காரில் கஞ்சா வைத்திருந்த அமமுக பெண் நிர்வாகியை காவலர்கள் கைது செய்தனர்.

கோவை வடவள்ளி அருகே காவலர்கள்புதன்கிழமையன்று திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பூரில் இருந்து பெண் ஒருவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரின் பின் பகுதியில் 4 கிலோ கஞ்சா, போதை ஊசிகள், வருமான வரித்துறை அதிகாரி போன்ற போலி அடையாள அட்டை உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து  காவலர்கள் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், திருப்பூர் நம்பியாம்பாளயத்தைச் சேர்ந்த அமமுக பெண் பிரமுகர் ஜெயமணி(39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து வடவள்ளி காவலர்கள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.