ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முன்னெச்சரிக்கையுடன் மூலனூரில் மீண்டும் பருத்தி விற்பனை 

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் திருப்பூர் மாவட்டம் மூலனூரில் பருத்தி விற்பனை மீண்டும் தொடங்கப்பட்டது.

News image
Updated On :19 ஜூன் 2020, 7:43 am

DIN


வெள்ளக்கோவில்: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் திருப்பூர் மாவட்டம் மூலனூரில் பருத்தி விற்பனை மீண்டும் தொடங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் தமிழகத்திலேயே பருத்தி அதிகளவு விற்பனை நடைபெறும் இடமாகும். கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டரை மாதங்களாக விற்பனை நிறுத்தப்பட்டது. இனி வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமை விற்பனை, பணப் பட்டுவாடா தொடர்ந்து நடைபெற உள்ளது. 

இந்த வார மறைமுக ஏலத்துக்கு 616 குவிண்டால் வரத்து இருந்தது. திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் 179 பேர் தங்களுடைய பருத்திகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனர். திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த 11 வணிகர்கள் வாங்குவதற்காக வந்திருந்தனர். குவிண்டால் ரூ. 3,400 - ரூ.4,959 வரை விற்பனையானது. விற்பனைத் தொகை ரூ.25 லட்சம் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டது. 

விற்பனைக் கூடத்தில் அனைவருக்கும் சுகாதாரத் துறை மூலம் கரோனா உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டதாக திருப்பூர் விற்பனைக் குழு முதுநிலைச் செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் தர்மராஜ், மகுடேஸ்வரன் மேற்பார்வையாளர்கள் சீரங்கன் , அருள்குமார் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.