நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா: இந்தியாவில் பலி 12,573 -ஆக அதிகரிப்பு; பாதிப்பு 3,80,532 -ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக 336 உயிரிழப்புகள் பதிவானதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,573 -ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2020, 4:45 am

DIN

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக 336 உயிரிழப்புகள் பதிவானதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,573 -ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 13,586 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 3,80,532-ஆக உயா்ந்துள்ளது. நாட்டில் புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 8-ஆவது நாளாக பெரிய அளவில்13,586-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. 

இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,63,248 போ் சிகிச்சையில் உள்ளனா். 2,04,711 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். 

மகாராஷ்டிரத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,20,504 ஆகவும், பலி எண்ணிக்கை 5,751 -ஆக உள்ள நிலையில் தொற்று பாதிப்பில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 60,838 -ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 52,334  ஆகவும், நாட்டில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது மிக மோசமான மாநிலங்களின் பட்டியலில் தேசிய தலைநகரம் தில்லியில் இதுவரை  49,979 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.