மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஏடிஎம் காவலாளி தாக்கிய வழக்கில் ஈரோட்டில் 4 பேர் கைது

ஈரோட்டில் ஏ.டி.எம் மில் கும்பலாக பணம் எடுக்க வந்தவர்களுக்கு அறிவுரை கூறிய ஏ.டி.எம் காவலாளியை அடித்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் உள்பட நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
Updated On :20 ஜூன் 2020, 6:15 am

DIN


ஈரோடு: ஈரோட்டில் ஏ.டி.எம் மில் கும்பலாக பணம் எடுக்க வந்தவர்களுக்கு அறிவுரை கூறிய ஏ.டி.எம் காவலாளியை அடித்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் உள்பட நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு திருநகர்காலனி பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன் தினம் இரவு காவலாளி கார்த்திகேயன் வழக்கம் போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது இரவில் பணம் எடுக்க நான்கு நபர்கள் வந்துள்ளனர். நான்கு பேரும் ஒரே நேரத்தில் ஏடிஎம் மையத்திற்குள் நுழையந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் இருந்த கார்த்திகேயன் நான்கு நபர்களையும் அழைத்து ஒரு ஒருவராக சென்று தான் பணம் எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.குடிபோதையில் இருந்த நான்கு நபர்களும் காவலாளி காரத்திக்கேயனை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த காவலாளி கார்த்திகேயன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இச்சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் ஈரோடு கிருஷ்ணாம் பாளையம்  சேர்ந்த விக்னேஷ், தேவா, முரளிதரன், மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனையும் உள்பட நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.