பொன்னேரி அரசு மருத்துவமனையில் மருத்துவர் உள்பட 5 பேருக்கு கரோனா

பொன்னேரி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், செவிலியர்கள் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. 
பொன்னேரி அரசு மருத்துவமனையில் மருத்துவர் உள்பட 5 பேருக்கு கரோனா
Published on
Updated on
1 min read


பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், செவிலியர்கள் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. 

திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள இம்மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தில் 30 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இதன் அருகே உள்ள வளாகத்தில் மகப்பேறு பிரிவு செயல்பட்டு வருகிறது.

அண்மையில் மருத்துவமனையில் பணியாற்றும் மயக்கவியல் மருத்துவர் மற்றும் கர்ப்பிணி பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் பணியாற்றும் அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் 4 செவிலியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com