திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திருப்பூர்: வருவாய்த்துறை அலுவலர்களின் கருப்புப் பட்டை போராட்டம் தொடங்கியது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் புதன்கிழமை கருப்புப்பட்டை போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

News image
கருப்புப்பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்
Updated On :24 ஜூன் 2020, 7:23 am

DIN


திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் புதன்கிழமை கருப்புப்பட்டை போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் புதன்கிழமை முதல் வரும் வெள்ளிக்கிழமை முதல் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த அறிவிப்பின்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், அவிநாசி, ஊத்துக்குளி ஆகிய இடங்களில் 400க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் கூறுகையில், கரோனா பணியின்போது மரணமடைந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ள ரூ.50 லட்சம் நிவாரணத்தை வழங்க வேண்டும். தமிழகம் முழுவதிலும் காலியாக உள்ள துணை ஆட்சியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றனர். 

மேலும், திருப்பூர்  மாவட்டத்தில் உள்ள  அனைத்து மாவட்ட, வட்டங்களிலும் வரும் வெள்ளிக்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வருவாய் அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.