கடந்த மே 27-ஆம் தேதி தொடங்கி பயணிகள் விமான சேவை நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் இருந்து சேலம் வந்த பயணிகளில் இதுவரை 17 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை சென்னையில் இருந்து சேலம் வந்த பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தியதில் ஒரு பெண் உள்பட ஐந்து பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய 53 வயது பெண், அவருடைய 45, 49 வயது தம்பிகள், சேலத்தை சேர்ந்த 27 வயது இளைஞர், நாமக்கல்லைச் சேர்ந்த 28 வயது இளைஞர், கள்ளக்குறிச்சியை சேர்ந்த 28 வயது இளைஞர் ஆகிய 5 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.