பிரதமருடன் ஆந்திர முதல்வர் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.


பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவுள்ளது என்ற வதந்திகளுக்கு மத்தியில் இன்று அக்கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி பிரதமரை நேரில் சந்தித்து பேசினார்.
சுமார் 40 நிமிடங்காள் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நிலுவையில் உள்ள திட்டங்கள், கர்னூல் மாவட்டத்தில் உயர் நீதிமன்றம் அமைக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதி, பொலவரம் திட்டத்திற்கான ரூ. 3,250 கோடி நிதி வெளியிடுமாறு முதல்வர் மோடியிடம் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு, காணொளி மூலம் கிருஷ்ணா-கோதாவரி நதி நீர் பகிர்வு பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் மற்றும் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஆகியோருடன் கூட்டத்தில் ரெட்டி கலந்து கொள்ள உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...