ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீதிமன்றங்கள் ஆன்லைன் விசாரணை நடத்த கூடுதலாக 1,500 உரிமங்கள்

நீதிமன்றங்கள் காணொலி மூலம் விசாரணைகளை நடத்த ரூ. 9 கோடி செலவில் கூடுதலாக 1,500 உரிமங்களை வாங்க அரசு தரப்பில் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :19 அக்டோபர் 2020, 10:09 am

PTI

நீதிமன்றங்கள் காணொலி மூலம் விசாரணைகளை நடத்த ரூ. 9 கோடி செலவில் கூடுதலாக 1,500 உரிமங்களை வாங்க அரசு தரப்பில் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, கரோனா காரணமாக பொதுமுடக்கம் அறிவித்த மார்ச் 24 முதல் செப்டம்பர் 31 வரை, இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களால் 26 லட்சம் வழக்குகளை விசாரித்து உள்ளன.

அதில், 25 உயர்நீதிமன்றங்களில் 6,88,318 வழக்குகளும், 19 ஆயிரம் மாவட்ட நீதிமன்றங்களில் 19,33,492 வழக்குகளும் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டுள்ளது. 
 
காணொலி விசாரணையானது, விரைவில் விசாரிக்கப்பட்டு நீதி வழங்க உதவியாக உள்ளதால், கரோனா தொற்று முடிந்த பிறகும் இந்த முறையானது தொடர வாய்ப்புள்ளது.

இந்த காணொலி விசாரணை நடத்த உதவும் மென்பொருளை 150 பேர் கொண்ட குழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து, மாவட்ட மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு வழங்குவதற்காக கூடுதலாக 1,500 உரிமங்களை வாங்க அரசு தரப்பில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.