47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அருப்புக்கோட்டை அருகே கண்மாய் நீரை எடுக்கவிடாமல் தடுப்பதாக கிராமத்தினர் புகார்

பந்தல்குடி அருகே சின்னாஞ்செட்டிப்பட்டியில் சிலர் கண்மாய் நீரை எடுத்துப் பயன்படுத்தவிடாமல் கிராமத்தினரைத் தடுப்பதாக திங்கள்கிழமை ஆட்சியரிடம் புகார் கிராம மக்கள் புகார் அளித்தனர்.

News image
அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே சின்னாஞ்செட்டிப்பட்டியில் கண்மாய்நீரை எடுத்துப் பயன்படுத்த விடாமல் சிலர் தடுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க சென்ற கிராமத்தினர்.
Updated On :19 அக்டோபர் 2020, 1:28 pm

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே சின்னாஞ்செட்டிப்பட்டியில் சிலர் கண்மாய் நீரை எடுத்துப் பயன்படுத்தவிடாமல் கிராமத்தினரைத் தடுப்பதாக திங்கள்கிழமை காவல்துறையிடம் புகார் அளித்ததுடன் ஆட்சியரிடமும் புகார் அளிக்க கிராமத்தினர் சென்றனர்.

பந்தல்குடி அருகே உள்ளது சின்னாஞ்செட்டிப்பட்டி கிராமம். இங்கு சுமார் 600க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதனிடையே இங்குள்ள கண்மாயில் உள்ள நீரை நீண்ட நெடுங்காலமாக இக்கிராமத்தினர் பயன்படுத்திவரும் நிலையில்,தற்போது சிலர் கண்மாய் நீரைப் பயன்படுத்தவிடாமல் கிராமத்தினரைத் தடுப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கிராமத்தினரின் கோரிக்கையைக் கேட்டு விசாரணை செய்ய பந்தல்குடி காவல்துறையினர் திங்கள்கிழமை நேரில் வந்திருந்தனர். அப்போது காவல்துறையிடம் புகார் செய்த பொதுமக்கள் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியதுடன் ஆட்சியரிடம் புகார் செய்யவும் மொத்தமாக சுமார் 100க்கு மேற்பட்டோர் கிளம்பினர்.

கரோனா தடுப்புச் சட்டத்தின்படி மொத்தமாக 100க்கும் மேற்பட்டோர் விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் செல்ல காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து தாங்கள் சென்றே தீருவோம் என கிராமத்தினர் கூறியதால், கைது செய்யப்படுவீர்கள் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதில் கிராமத்தினரில் 10 பேர் மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்கச் செல்ல அனுமதிக்கப் பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.