தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

அக்.24இல் ஆளுநர் மாளிகை முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

மருத்துவக் கல்வியில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி அக்டோபர் 24இல் ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.

News image
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
Updated On :22 அக்டோபர் 2020, 3:30 pm

DIN

மருத்துவக் கல்வியில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி அக்டோபர் 24இல் ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில்,

மருத்துவக் கல்வியில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித முன்னிரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, சட்டமன்றத்தில் முன்னிரிமை அடிப்படையில், அனைத்து கட்சிகளும் இணைந்து ஒருமனதாக செப்டம்பர் மாதம் 15 அன்று நிறைவேற்றி, மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு அனுப்பியும், அவர் அந்த மாசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்க முன்வரவில்லை.

நீட் முன்னிரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதா குறித்து அனைத்துக் கோணங்களிலும் கலந்தாலோசணை நடத்தி வருகிறேன். இது குறித்து முடிவு எடுக்க எனக்கு 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படுகிறது.” என்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே ஒருமாத காலம் அவகாசம் முடிந்துவிட்ட நிலையில் குறைந்தபட்சம் மேலும் ஒரு மாதம் என்பது 7.5 சதவிகித முன்னிரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நீர்த்துப்போக வைப்பதாகும்.

நீட் தேர்வில் வெற்றி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித முன்னிரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு இனியும் கால அவகாசம் கோராமல், உடனே தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரியும் ஆளுநருக்கு அரசியல்ரீதியாக அழுத்தம் கொடுக்கத் தவறி, மாணவர்களுக்குத் துரோகம் செய்யும் எடப்பாடி அதிமுக அரசைக் கண்டித்தும் 24.10.2020 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் திரவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆளுநர் மாளிகை முன்பு “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.” என அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.