சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

ஹைதராபாத் விமான நிலையத்தில் முதன்முறையாக ‘இ-போர்டிங்’ சேவை

இந்தியாவில் முதன்முறையாக ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் சர்வதேச விமான பயணிகளுக்கு இ-போர்டிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

News image

ஹைதராபாத் விமான நிலையம்

Updated On :27 அக்டோபர் 2020, 7:01 am

PTI

இந்தியாவில் முதன்முறையாக ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் சர்வதேச விமான பயணிகளுக்கு இ-போர்டிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக ஹைதராபாதில் இருந்து வெளியேறும் சர்வதேச விமான பயணிகள், காகிதம் அல்லாமல் அனைத்து கோப்புகளையும் மிண்ணனு மூலம் காண்பித்து பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் முதன்முறையாக இ-போர்டிங் அறிமுகப்படுத்திய விமான நிலையமாக உள்ளது.

தற்போது இண்டிகோ ஏர்லைன்ஸின் சர்வதேச விமானங்களில் இந்த சேவை அனுமதிக்கப்படுகிறது.

இந்த சேவையின் முதல் விமானமாக, இண்டிகோ ஏர்லைன்ஸ் அக்டோபர் 2 ஆம் தேதி 6E 1405 விமானத்தில் ஹைதராபாத்தில் இருந்து தங்கள் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது அறிமுகப்படுத்தியது.

ஹைதராபாத்தில் இருந்து இயங்கும் அனைத்து சர்வதேச விமானங்களிலும், இந்த சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.