பாகிஸ்தானில் டிக்டாக் காணொளி எடுக்க முயன்ற 3 பேர் பலி

பாகிஸ்தானில் குளத்தின் அருகே டிக் டாக் காணொளி பதிவு செய்ய முயன்ற 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாகிஸ்தானில் குளத்தின் அருகே டிக் டாக் காணொளி பதிவு செய்ய முயன்ற 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் கெமாரி டவுனில் வசிப்பவர்கள் ஷாஜாத் (23), சஜ்ஜாத் (25) மற்றும் ஜபீர் (18). இவர்கள் ரெய்ஸ் கோத் பகுதிக்கு சுற்றுலாவிற்கு சென்றனர். அப்போது அங்குள்ள குளத்தின் கரையில் நின்றபடி டிக் டாக் காணோளி பதிவு செய்தனர்.

அப்போது ஒருவர் குளத்தில் தவறி விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற 2 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர்.

இதையடுத்து அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் அவர்களின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com