குடியரசுத் தலைவருடன் இன்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்பட 5 எதிர்கட்சித் தலைவர்கள் சந்திக்கின்றனர்.
நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த வேளாண்துறை சாா்ந்த மசோதாக்கள் தொடா்பாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிடுவதற்கு எதிா்க்கட்சிகள் திட்டமிட்ட நிலையில் இன்று மாலை 5 மணிக்கு எதிர்கட்சிகளைச் சார்ந்த 5 தலைவர்களை மட்டும் சந்திக்க ஒப்புதல் அளித்தனர்.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலாம் நபி ஆசாத் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 4 தலைவர்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.