பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

பிரிட்டனுக்கு ஜன.8 முதல் விமான சேவை தொடக்கம்

பிரிட்டனுக்கு ஜனவரி 8ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :1 ஜனவரி 2021, 8:22 pm IST

பிரிட்டனுக்கு ஜனவரி 8ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட புதிய அதி தீவிர கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, இந்தியா - பிரிட்டன் இடையே டிசம்பர் 22-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி முதல் ஜனவரி 7-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

இந்தியா-பிரிட்டன் இடையே ஜனவரி 8-ம் தேதி முதல் விமான சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இருப்பினும், ஜனவரி 23ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகளுடன் வாரத்திற்கு 15 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். 

மேலும், இந்த விமானங்கள் அனைத்தும், தில்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் இருந்து மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த 29 பேருக்கு புது வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.