விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பறவைக் காய்ச்சல்: பஞ்சாப் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு

பறவைக் காய்ச்சல் பரவலையடுத்து பஞ்சாப் மாநிலத்தை கட்டுபாட்டு பகுதியாக அறிவித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 9:03 pm IST

பறவைக் காய்ச்சல் பரவலையடுத்து பஞ்சாப் மாநிலத்தை கட்டுபாட்டு பகுதியாக அறிவித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹரியாணா, கேரளம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் உள்ள பறவைகள்  பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பை தடுக்கும் விதமாக, அம்மாநிலத்தை கட்டுபாட்டு பகுதியாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து பஞ்சாப் அரசு வெளியிட்ட செய்தியில்,

அண்டை மாநிலங்கள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப் மாநிலம் முழுவதையும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் கோழிகள், கோழி இறைச்சி உள்ளிட்ட அனைத்தும் இறக்குமதி செய்வதற்கு ஜனவரி 15 வரை தடை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.