அனைத்து மாநில முதல்வர்களுடன் திங்கள்கிழமை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாட்டில் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று நடைபெற்றது.
மேலும், ஜனவரி 13ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஜனவரி 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த ஆலோசனையில், கரோனா தடுப்பூசியை விநியோகிக்க மாநிலங்களில் செய்யப்பட்டிருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாற்றம்.. முன்னேற்றம்...
சிரி... சிரி...

உலகப் போட்டிகளில் வெல்வதே லட்சியம்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உணவுக்குப்பின் நடைப்பயிற்சி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

