மேற்கு வங்கத்தில் வாக்களிக்க செல்லும் பெண்கள், பொதுமக்களை மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் தாக்குவதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போது சிஆர்பிஎஃப் வீரர்கள் வாக்களிக்க வந்தவர்களை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கூச் பெஹாரில் மம்தா பேசியதாவது,
சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்புகளை நாங்கள் விரும்புகிறோம், பொதுமக்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். சிஆர்பிஎஃப் வீரர்கள் பொதுமக்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைவதைத் தடுக்கக்கூடாது.
உண்மையான வீரர்கள் இருக்கும் சிஆர்பிஎஃபை நான் மதிக்கிறேன், ஆனால் தொல்லை செய்கிற, பெண்களைத் தாக்கும் மற்றும் மக்களைத் துன்புறுத்தும் பாஜகவின் சிஆர்பிஎஃபை நான் மதிக்கமாட்டேன் எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மீனவ சங்கம் நிதியுதவி

பழனியில் குழந்தைகளின் ஓவியக் கண்காட்சி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


