ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மேற்கு வங்க துப்பாக்கிச் சூட்டில் வீரர்கள் ஈடுபடவில்லை: சிஆர்பிஎஃப் விளக்கம்

மேற்கு வங்கத்தில் 4 வாக்காளர்களை சிஆர்பிஎஃப் வீரர்கள் சுடவில்லை என மத்திய ரிசர்வ் காவல் படை மறுப்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 8:34 am

மேற்கு வங்கத்தில் 4 வாக்காளர்களை சிஆர்பிஎஃப் வீரர்கள் சுடவில்லை என மத்திய ரிசர்வ் காவல் படை மறுப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கூச்பிகார் மாவட்டத்தில் சிதல்குச்சி பகுதியில் வாக்களிப்பு நடந்து கொண்டிருந்தபோது நடந்த தகராறில் 4 வாக்காளர்களை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிஆர்பிஎஃப் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,

கூச் பெஹாரின் சிதல்குச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஜொர்பட்கி வாக்குச்சாவடிக்கு வெளியே 4 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.  இந்த வாக்குச்சாவடியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பணி அமர்த்தப்படவில்லை. மேலும், இந்த சம்பவத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஈடுபடவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.