இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மகாராஷ்டிரத்தில் பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு: கல்வித்துறை அமைச்சர்

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரத்தில் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்ட்வாக் தெரிவித்துள்ளார்.

News image
மகாராஷ்டிரத்தில் பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு
Updated On :12 ஏப்ரல் 2021, 9:46 am

ANI

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரத்தில் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்ட்வாக் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலை ஏற்பட்டிருக்கும் சூழலில், ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் நடக்கவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். 

இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கூறியதாவது,

மகாராஷ்டிரத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே மாத இறுதி வாரத்திலும், 10ஆம் வகுப்பு தேர்வுகள் ஜூன் மாதத்திலும் நடைபெறும். புதுப்பிக்கப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

மேலும், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் வாரியத்திற்கும் தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.