மேற்கு வங்க பாஜக தலைவர் பிரசாரம் மேற்கொள்ளத் தடை

மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் அடுத்த 24 மணி நேரத்துக்கு பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
திலீப் கோஷ்.
திலீப் கோஷ்.


மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் அடுத்த 24 மணி நேரத்துக்கு பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

ஏப்ரல் 15 இரவு 7 மணி முதல் ஏப்ரல் 16 இரவு 7 மணி வரை எவ்வித பிரசாரத்தையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

திலீப் கோஷ் தேர்தல் விதிமுறைகளை மீறி கருத்துகளைத் தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்தத் தடையை விதித்துள்ளது.

இன்று மாலை 6 மணியுடன் 5ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com