ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கர்நாடக முதல்வருக்கு 2வது முறையாக கரோனா

கர்நாடக முதல்வர் எடியூரப்பா காய்ச்சல் காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
கர்நாடக முதல்வர் எடியூரப்பா
Updated On :16 ஏப்ரல் 2021, 9:13 am

ANI

கர்நாடக முதல்வர் எடியூரப்பா காய்ச்சல் காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காய்ச்சல் காரணமாக வெள்ளிக்கிழமை காலை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடியூரப்பா அனுமதிக்கப்பட்டார். அங்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கரோனாவால் பாதிக்கப்படுவது இது இரண்டாம் முறையாகும்.

இதையடுத்து, பெங்களூருவில் உள்ள வேறொரு மருத்துவமனைக்கு எடியூரப்பா மாற்றப்படவுள்ளார்.

இதற்கிடையே, கர்நாடகத்தில் பரவி வரும் கரோனா குறித்து முதல்வர் எடியூரப்பா தலைமையில் நேற்று உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.