மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருச்சியில் பெண் காவலர் தற்கொலை: காவல்துறை விசாரணை

திருச்சியில் பெண்காவலர் ஒருவர் எலி விஷத்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

News image
கௌசல்யா
Updated On :21 ஏப்ரல் 2021, 12:57 pm

DIN

திருச்சியில் பெண்காவலர் ஒருவர் எலி விஷத்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகள் கௌசல்யா (23). கடந்த 2017 ஆம் ஆண்டு காவலராக தேர்வு செய்யப்பட்ட அவர், திருச்சி மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தார். கே கே நகர் பகுதியில் உள்ள காவலர்கள் குடியிருப்பில் வசித்து வந்த அவர், செவ்வாய்க்கிழமை இரவு, விஷம் உட்கொண்டு மயங்கிய நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இரவே அவரது நிலை மோசமாகியுள்ளது. இந்நிலையில் அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து கே. கே. நகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காவல்துறை மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், வேறு சமூகத்தைச் சேர்ந்த சக பணியாளர் ஒருவருடன் கௌசல்யாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும்  திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். பின்னர்,  கௌசல்யா வீட்டில் சென்று பெண் கேட்டபோது அவரது பெற்றோர் மறுத்துவிட்டனாராம். எனவே அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேறு பெண்ணை திருமணம் செய்துசென்றுவிட்டாராம். இதனால் விரக்தியிலிருந்த கௌசல்யா தற்கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.