ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மோடி உத்தரவு
நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார்.


நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் கரோனா பரவல் அதிகரித்தும் வரும் நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் நீடித்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதால் மாநில அரசுகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன.
இந்நிலையில் தில்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் விநியோகம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தடையின்றி ஆக்சிஜனை விநியோகம் செய்யவும், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஆக்சிஜனை மாநிலங்களுக்கு விமானம் மூலம் விரைவாக கொண்டு செல்லவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...