2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மேற்கு வங்க மூத்த அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அலுவலர் ஆலோசனை

கரோனா பரவலுக்கு மத்தியில், மேற்கு வங்க 7, 8ஆம் கட்டத் தேர்தல் நடத்துவது குறித்து மாநில மூத்த அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆலோசனை நடத்தினார்.

News image
சுஷில் சந்திரா
Updated On :24 ஏப்ரல் 2021, 11:30 am

ANI

கரோனா பரவலுக்கு மத்தியில், மேற்கு வங்க 7, 8ஆம் கட்டத் தேர்தல் நடத்துவது குறித்து மாநில மூத்த அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.

இதில், 6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 2 கட்டத் தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய சுஷில் சந்திரா பேசியது,

கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக 6 கட்டத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தேர்தல்களில் வாக்காளர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து வருவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், வாக்குச்சாவடிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றார். 

இந்த கூட்டத்தில், தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார், மேற்கு வங்கத்தின் தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.