யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

புதிதாக 551 ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்க மோடி உத்தரவு

நாடு முழுவதும் 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

News image
நாடு முழுவதும் 551 ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்: மோடி உத்தரவு
Updated On :25 ஏப்ரல் 2021, 7:20 am

DIN

நாடு முழுவதும் புதிதாக 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் மொத்தம் 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க மோடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் அந்த மாவட்டத்தில் உள்ள பிற மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.