ஆளுநருடன் சற்றுநேரத்தில் தலைமைச் செயலாளர் சந்திப்பு: புதிய அறிவிப்பு வெளியாகும்?
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் இன்று மாலை தலைமைச் செயலாளர் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.


கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் இன்று மாலை தலைமைச் செயலாளர் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாளுக்கு நாள் கரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் வரும் மே 1, 2 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்க பரிசீலனை செய்யும்படி உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், இரண்டு நாள்கள் ஊரடங்கு ஆகியவை குறித்து தமிழக ஆளுநரை சந்தித்து இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த ஆலோசனையின் போது, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காவல்துறை தலைவர் திரிபாதி உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர்.
மே 2ஆம் தேதி வாக்கெண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...