கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விமானப்படையின் தலைமை தளபதி ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ். பதெளரியாவுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.
நாள்தோறும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தேவையான பொருள்களை இறக்குமதி, ஆக்ஸிஜன் தயாரிக்கும் இடங்களில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு டேங்கர்களை கொண்டு செல்லும் பணிகளை இந்திய விமானப்படை செய்து வருகின்றது.
இந்நிலையில், விமானப்படையின் தலைமை தளபதியுடன் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதில், ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தேவையான உபகரணங்கள், கரோனா மருந்துகள் மற்றும் டேங்கர்களை விரைவாக எடுத்து செல்வது, விமானப்படையின் கீழ் உள்ள மருத்துவமனைகளை கரோனா சிகிச்சைக்கு மாற்றுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கபட்டதாக தெரிவித்துள்ளனர்.