இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நிறைவடைந்தது 5 மாநில தேர்தல்கள்: மே 2-ல் வாக்கு எண்ணிக்கை

மேற்கு வங்கம், அசாம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் இன்றுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2021, 1:21 pm

DIN

மேற்கு வங்கம், அசாம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் இன்றுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கரோனா இரண்டாம் அலை பரவலுக்கு மத்தியில், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னுதாரணமாக வைத்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.

அதன் அடிப்படையில் தமிழகம், புதுவை, கேரளம் ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது.

இருப்பினும், அசாமில் 3 கட்டங்கள், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இறுதி கட்ட தேர்தலாக மேற்கு வங்கத்தில் 35 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

மாலை 6.30 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து, 5 மாநிலங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

இந்த தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி கரோனா விதிமுறைகளை பின்பற்றி நடைபெறவுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.