பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரையாற்றியதற்கு பிப்ரவரி 8ஆம் தேதி பிரதமர் மோடி நன்றி தெரிவிக்கவுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.29 முதல் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் துவக்க உரையாற்றினார்.
இந்நிலையில், அவரின் உரைக்கு மாநிலங்கவையில் வருகின்ற திங்கள்கிழமை(பிப்.8) பிரதமர் மோடி நன்றி தெரிவிக்கவுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரையின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.