தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மார்ச் 12-ல் ஆந்திர மாநகராட்சிகளுக்கு தேர்தல்

ஆந்திரத்தின் 12 மாநகராட்சிகள் மற்றும் 75 நகராட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.

News image
மார்ச் 12-ல் ஆந்திர மாநகராட்சிகளுக்கு தேர்தல்
Updated On :15 பிப்ரவரி 2021, 11:04 am

DIN

ஆந்திரத்தின் 12 மாநகராட்சிகள் மற்றும் 75 நகராட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.

இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மார்ச் 10ஆம் தேதியும், வாக்கெண்ணிக்கை மார்ச் 14ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் நிம்மகட்டா ரமேஷ் குமார் வெளியிட்ட செய்தியில்,

கரோனாவிக்கு பின் நிலைமை சீரடைந்துள்ளதால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சித் தேர்தல் தற்போது நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநிலம் முழுவதும் உள்ள பஞ்சாயத்துகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

12 மாநகராட்சிகள் மற்றும் 75 நகராட்சிகளுக்கான வாக்குப் பதிவுகள் மார்ச் 10 ஆம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் நடைபெறாத தொகுதிகளுக்கு மார்ச் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கெண்ணிக்கை மார்ச் 15ஆம் தேதி நடைபெறும்.

ஆந்திரத்தில் விஜயநகரம், எலுரு, மச்சிலிபட்னம், குண்டூர், ஓங்கோல், திருப்பதி, சித்தூர், கடப்பா, கர்னூல், அனந்தபூர், விசாகப்பட்டினம் பெருமாநகராட்சி மற்றும் விஜயவாடா பெருமாநகராட்சி ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.