தமிழிசையுடன் புதுவை முதல்வர் சந்திப்பு
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை செளந்தரராஜனுடன் முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை சந்தித்தார்.


புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை செளந்தரராஜனுடன் முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை சந்தித்தார்.
புதுச்சேரியில் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை முதல்வர் நாராயணசாமி கடந்த 10-ம் தேதி நேரில் சந்தித்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும் என புகார் மனு அளித்தார்.
இதையடுத்து தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜனை கூடுதல் பொறுப்பாக புதுவை துணைநிலை ஆளுநராக குடியரசுத் தலைவர் செவ்வாய்க்கிழமை நியமித்தார்.
இந்நிலையில், இன்று புதுவை வந்தடைந்த துணைநிலை ஆளுநரை, அவரது மாளிகையில் நேரில் சென்று புதுவை முதல்வர் நாராயணசாமி சந்தித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...