குடியரசு தின விழாவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைப்பு: தில்லி காவல்துறை

தில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவை பார்வையிட வருவோர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து இணை ஆணையர் கே மணீஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விழா அணிவகுப்பிற்கு ஒத்திகையில் வீரர்கள்
குடியரசு தின விழா அணிவகுப்பிற்கு ஒத்திகையில் வீரர்கள்
Updated on
1 min read

தில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவை பார்வையிட வருவோர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து இணை ஆணையர் கே மணீஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் குடியரசு மற்றும் சுதந்திர தினவிழா, தில்லி செங்கோட்டையில் கொண்டாடப்படும். இந்த கொண்டாட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருவார்கள். 

இந்நிலையில் நிகழ்வாண்டு கரோனா பரவல் காரணமாக பல்வேறு சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது.

இதுகுறித்து இணை ஆணையர் கே மணீஷ் அகர்வால் கூறியதாவது,

கரோனா பரவல் காரணமாக குடியரசு தினவிழாவில் வீரர்களின் அணிவகுப்பு பாதையின் தூரம் குறைக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்கும் அழைப்பாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

கரோனா நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக நுழைவாயில்களில் மருத்துவக் குழுக்கள் நிறுத்தப்படும்.  மேலும் விழாவிற்கு வருவோர் அழைப்பிதழ் இல்லாமல் வந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com